சென்னை: சசிகலா விடுதலையை காலதாமதப்படுத்த சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக ஆதரவாளர் ராஜராஜன் புகார் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிந்து விசாரணை செய்ய பெங்களூரு காவல்துறை ஆணையருக்கு ராஜராஜன் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார். பெங்களூரு சிறை நிர்வாகம் மீது வழக்கு பதிந்து விசாரிக்க சசிகலா ஆதரவாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.