சிவகங்கை: தமிழகத்தின் உரிமையை மத்திய பாஜக ஆட்சியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி அடகு வைத்துவிட்டதாக கனிமொழி குற்றசாட்டியுள்ளார். கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டது பழனிசாமியின் அதிமுக ஆட்சி என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் பழனிச்சாமி விவசாயியா என கேள்வியெழுப்பியுள்ளார்.