சென்னை: பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கில் மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் தங்கராஜின் வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. கல்லூரிகளில் காலி பணியிட விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.