சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக வருகிற 25-ம் தேதி பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ளார். அதனை பின்வருமாறு காண்போம்; தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தங்க உள்ளதாக கூறியுள்ளது. பாமக-வின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளதா அந்த அறிக்கையில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.