×

ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு

மாமல்லபுரம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஈஸ்வரன். கூலி தொழிலாளி. இவருக்கு உமாமகேஸ்வரி (23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மாலை அணிந்து விரதம்  இருந்தார். இதையொட்டி, நேற்று குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர், அனைவரும் மாமல்லபுரம் சென்றனர். அங்கு, புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.பின்னர் உமாமகேஸ்வரி, தனது  தம்பியுடன் கடலில் குளித்தார். அப்போது, திடீரென வந்த ராட்சத அலையில் இருவரையும் இழுத்து சென்றது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் அலறி கூச்சலிட்டார்.உடனே, அங்கிருந்த பொதுமக்கள், கடலில் குதித்து அவரது மகனை  பத்திரமாக மீட்டனர். ஆனால், உமாமகேஸ்வரியை, படகு மூலம் நடுக்கடலுக்கு சென்று சடலமாக மீட்டனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Death ,teenager , Death of a teenager trapped in a giant wave
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு