×

மகள் கண்முன் பரிதாபம் சொத்துக்காக மாமனார் கொலை: மருமகன் வெறிச்செயல்

அண்ணாநகர்: வில்லிவாக்கம் சிட்கோ நகர், 46வது தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (82).  இவர், தனது மகள் ஹேமலதா மற்றும் மருமகன் குமார் (54) ஆகியோருடன் வாடகை வீட்டில் 3 வருடமாக வசித்து வந்தார். இவருக்கு, ஆற்காடு  வரகரபுதூர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது.  இதை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும், என குமார் நேற்று முன்தினம் இரவு தனது மாமனாரிடம் தகராறு செய்துள்ளார். ஆனால், அவர் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த குமார், மாமனார் ஜெகநாதனை சரமாரியாக தாக்கி, சமையல்  அறையில் இருந்த காய்கறி கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து ஹேமலதா கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லிவாக்கம் போலீசார், ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, குமாரை கைது செய்தனர்.



Tags : Father-in-law , Father-in-law murdered for pathetic property in front of daughter: nephew hysteria
× RELATED மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!!