சென்னை: குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கிராம சபை நடைபெறுமா என்பது பற்றி விரையில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.