டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு ஆக்கப்பூர்வ சிந்தனையை காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேஸ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய அணியினரிடம் ஆக்கப்பூர்வ சிந்தனை வலுத்ததால் சாதகமான முடிவுகள் கிடைத்தது என்று புகழாரம் சூட்டினார். பல்கலைக்கழக மாணவர்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.