×

பிப். முதல் வாரத்தில் கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கம்!: தொல்லியல் துறை அறிவிப்பு

சிவகங்கை: கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2,600 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.


Tags : Archaeological Department Announcement , Feb. First week, Lower 7th Phase Excavation, Department of Archeology
× RELATED யானை தாக்கி விவசாயி பலி