அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இடம் தேர்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆளில்லா கேமரா, குட்டி விமானம் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றிலும் 18 கிலோ மீட்டருக்கு ஆய்வு நடத்தப்படுகிறது. பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.