பெங்களூரு: எதிரி நாடுகளின் விமான தளங்களில் உள்ள ஓடுபாதைகள், ரேடார்கள், இதர ராணுவ சம்பந்தப்பட்ட தளவாடங்களை தாக்கி அழிப்பதற்காக, ‘ஸ்மார்ட் ஆன்டி ஏர்பீல்ட் ஆயுதம்’ எனப்படும், விமான நிலைய அழிப்பு ஆயுதத்தை பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம் (எச்ஏஎல்), உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது. நேற்று இது, ‘ஹாக்-1’ விமானத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.