×

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து ரத்து

சென்னை: கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரது தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும். ஆனால் இந்தாண்டு குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என்று ஆளுநர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Governor , Cancel the tea party given by the Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...