சென்னை: இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த மீனவர்கள், மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியின் அடிப்படையில் மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.