மதுரை: மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது முறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.