சென்னை: உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய உடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. 117 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.