திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப் பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளபோது மிகுந்த ஆர்வத்துடன் மத்திய அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்று தெரிவித்தார்.