டெல்லி: இந்தியாவிலேயே உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.