மதுரை: ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்துள்ளது. சட்டத்திருத்தம் கொண்டுவர நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற மனுதாருக்கு உத்தவிடப்பட்டுள்ளது.