×

நீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தான் கலந்துகொண்டேன். இந்த தேர்வில் மாதிரி விடை தாளில் 720 மதிபெண்களுக்கு 520 மதிப்பெண்கள்  பெற்றேன். ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு நான் 19 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளதாக தேர்வு முடிகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து, என்னுடைய விடைதாள்களை மறு மதிப்பீடு செய்யக்கோரி தேசிய தேர்வு முகமைக்கு மனு அளித்தேன். விடைதாளை மறுமதிப்பீடு செய்யவும், விடைதாளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தேசிய தேர்வு முகமைக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : re-evaluation ,NDA ,ICC , Case seeking re-evaluation of NEET exam answer sheet: ICC notice to NDA
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்