×

பிப்.3ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: பிப்ரவரி 3ம் தேதி தாயகத்தில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழுக் கூட்டம் வருகிற பிப்ரவரி 3ம் தேதி காலை 9 மணிக்கும், அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள். உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Madhyamaka High Level Committee Meeting ,Vaiko Announcement , Madhyamaka High Level Committee Meeting on Feb. 3: Vaiko Announcement
× RELATED மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் : வைகோ அறிவிப்பு