சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை முடித்து வைத்தது. அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விருதுநகரை சேர்ந்த காந்திராஜன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.