×

தா.பழூர் அருகே இருகையூரில் இடுகாட்டு பாதை சேறும், சகதியுமாக கி்டக்கும் அவலம்: சடலத்தை எடுத்து செல்ல மக்கள் கடும் அவதி

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது இருகையூர் கிராமம். இந்த கிராமத்தில் காலனி தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு சுமார் 1 கிமீ தூரம் மண் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். தற்போது வரை இடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. வெயில் காலங்களில் யாரேனும் இறக்க நேரிட்டால் சாலையில் கொண்டு செல்வதற்கு கரடுமுரடான சாலையாக இருந்தாலும் கொண்டு சென்று சேர்த்து விடுவதாகவும், மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக கிடப்பதால் பாதையில் இறந்தவரின் உடலை சுமந்து செல்பவர்கள் மட்டும் இன்றி நடந்து செல்பவர்கள் என அனைவரும் சேற்றில் வழுக்கி விழுந்து புரண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வயது முதிர்வின் காரணமாக ஒருவர்இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது சேற்றில் பலர் வழுக்கி விழுந்து சென்றனர். இது போன்ற சம்பவம் மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இதற்கான தீர்வு என்பதே இதுவரை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே . மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடுகாட்டிற்கு சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Irugaiyur ,cemetery ,Dhaka Palur , Tragedy in Irugaiyur cemetery near Dhaka
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது