×

மாவட்டத்தில் கோவிட் 19 தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை ஊழியர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிட் 19 தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை, திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் 11 ஆயிரம் பதிவு பெற்ற முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதன் அடிப்படையில் திருப்புகுழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பலர் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

Tags : Health workers ,district ,Govt 19 , Health workers enthusiastically vaccinated Govt 19 in the district
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...