திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து மங்களூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் வந்தபோது சுமார் 55 வயது மதிப்புடைய ஒருவர் நேற்று தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.