×

கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக் கொள்ளலாம், யார் போடக் கூடாது என மத்திய சுகாதாரத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.


* 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
* ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.
* முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி கொடுக்கக் கூடாது.
* குறிப்பிட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின் போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக் கூடாது.
* காய்ச்சல் இருப்பவர்கள், மாதவிடாய் சரியான இடைவெளியில் இல்லாதவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள் தடுப்பூசி போடக்கூடாது.
* கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக் கூடாது.
* கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது.
* ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.
* நோய்த்தொற்றின் (செரோ-பாசிட்டிவ்) அல்லது ஆர்டி-பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள் (இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு), நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களை அதிக கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம்.

Tags : Federal Health Department , Corona, vaccine
× RELATED இந்தியாவில் ஒரே நாளில் 8,306 பேருக்கு...