×

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை சமர்ப்பிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோதாதேவி பரினய உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மாலை சூடப்பட்டது. இந்த மாலை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அந்த மாலை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.



Tags : Andal Soodik ,Tirupati Ezhumalayan , Evening submission given by Andal Soodik to Tirupati Ezhumalayan
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...