சண்டிகர் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்ட சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு அங்கு மர்ம நபர்கள் நடமாட்டம் தெரிந்தது. பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர், சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்றார். வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அந்த நபர் கொல்லப்பட்டார். அவர் தீவிரவாதியா என விசாரிக்கப்படுகிறது.