டெல்லி: அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அஞ்சல் துறை தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.