×

‘துக்ளக்’ வார இதழின் 51-வது ஆண்டு நிறைவு விழா: சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா..!!

சென்னை: டெல்லியில் இருந்து விமானம் மூலம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். பாஜக சார்பில் நடக்கும் பொங்கல் விழாவிலும், ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார். ‘துக்ளக்’ வார இதழின் 51-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு பதிலாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு சென்னை வரும் நட்டாவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மதுரவாயலில் நடக்கும் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழாவில் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். இரு நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு நட்டா டெல்லி திரும்புகிறார். சென்னையில் ஜெ.பி.நட்டாவை சி.டி.ரவி, எல்.முருகன், இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நம்ம ஊரு பொங்கல் மற்றும் துக்ளக் வார இதழின் விழாவில் ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.

Tags : JP Natta ,BJP ,Chennai , Chennai BJP, J.P. Natta
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...