×

பொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை வந்தார் ராகுல் காந்தி

மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண  ராகுல் காந்தி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்துள்ளார். அவர், ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார். இதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வருகை தருகிறார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர் தமிழர்களின் வீர விளையாட்டை மேடையில் அமர்ந்து காண்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ்குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள். ராகுல்காந்தி பிற்பகல் 2 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல் காந்தி மதுரை வருகையையொட்டி போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம், மேடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள். விழா மேடை முழுவதும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags : Rahul Gandhi ,Madurai ,occasion ,festival ,Pongal ,Avanyapuram , Pongal Festival, Avanyapuram, Jallikattu, Madurai, Rahul Gandhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...