×

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலாவதாக அவிழ்த்து விடப்பட்ட கோயில் காளை

மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 430 மாடுபிடி வீரர்களும், 788 காளைகளும் களம் காண இருக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்தன.

ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் ஆரஞ்சு நிற உடை அணிந்து வீரர்கள் களத்தில் உள்ளனர். அவனியாபுரம் பாலகுருநாதன் கோயில் காளை உள்ளிட்ட 4 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிகட்டுப் போட்டி தொடங்கியது.


Tags : Started, Avanyapuram, Jallikattu, Siri Boy, Temple Bull
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...