×

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா: முதல்வரிடம் கடிதம் வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சமீபத்தில் ஏனாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு சிலர் நான் ஆந்திர அரசியலுக்கு செல்ல இருப்பதாக கூறி வருகின்றனர். உண்மையில் நான் ஏனாமை விட்டு எங்கும் செல்லவில்லை. திருப்பதி தேவஸ்தான இயக்குநர் பொறுப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி வழங்குவதாக கூறியுள்ளார் என பேசினார். இந்நிலையில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார். தான் பயன்படுத்தி வந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு இல்லத்தையும் காலி செய்துவிட்டார்.

Tags : Malladi Krishna Rao ,Puducherry ,Chief Minister , Puducherry Minister Malladi Krishna Rao resigns: Presents letter to Chief Minister
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...