சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வயல்களில் போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த முதல்வர் அறியுறுத்தியுள்ளார்.