டெல்லி: பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவுவதையடுத்து, டெல்லியில் உள்ள உணவகங்களில் ஆஃபாயில் முட்டை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதனை மீறும் உணவாக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.