ஒட்டன்சத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பரப்பலாறு அணையிலிருந்தது 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நங்காஞ்சி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித் துறை அறிவுறுத்தி உள்ளது. 90 அடி உயரம் கொண்ட பரப்பலாறு அணையில் தற்போது 87 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.