×

சபரிமலையில் படிபூஜை 2037 வரை முன்பதிவு நிறைவு

திருவனந்தபுரம் :சபரிமலையில் 2037ம் ஆண்டு வரை படிபூஜைக்கான முன்பதிவு முடிந்தது. படிபூஜைக்கான தற்போதைய கட்டணம் ₹75 ஆயிரம் ஆகும். இது சன்னிதானத்தில் மிகவும் விலையுயர்ந்த வழிபாடுகளில் ஒன்றாகும். சபரிமலையில் நேற்று தந்திரி கண்டரர் ராஜீவரரு முன்னிலையில் படிபூஜை நடந்தது. இதுபோல மகரவிளக்கிற்கு பிறகு, 15 முதல் 19ம் தேதி வரை படிபூஜை நடக்கும்.

இந்த நிலையில் சபரிமலையில் மகரவிளக்கு தரிசனத்திற்காக தற்காலிக கொட்டகை அமைத்து பக்தர்கள் தங்கக்கூடாது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அரசும், திருவிதாங்கூர் தேவஸம்போர்டும் இதை உறுதி செய்ய வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Booking ,Sabarimala , Sabarimala, Padipooja, reservation
× RELATED டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே