×

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்களில் மக்களுக்கு 3 நாட்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி : கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட சுற்றுலா தலங்களில் வரும் 15ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மக்களுக்கு அனுமதி கிடையாது.திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு சுற்றுலா தளம் மற்றும் புளியஞ்சோலை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இந்த இடங்களில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : tourist sites ,spread , Trichy: In order to prevent the spread of corona, people are allowed to visit tourist sites in Trichy district for 3 days from the 15th
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...