×

கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

திருச்சி: கொரோனா தடுப்பூசியின்  முதல் டோஸ் போட்டுவிட்டு 2 டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்,


Tags : corona vaccinators , Do not isolate corona vaccinators: Health Minister appeals
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...