கடலூர்: விருத்தாச்சலம் கம்மாபுரத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மழைநீர், என்.எல்.சி சுரங்கம் வெளியேற்றிய நீர் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.