ஈரோடு: முதல் கட்டமாக திறக்கப்படும் 10,12 -ம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. விருப்பமுள்ள 10,12 -ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 98 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வரவிரும்புவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆய்வு செய்து படிப்படியாக பிற வகுப்புகளும் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.