×

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பிய சீக்கிய வாலிபர்

புதுடெல்லி: வேற்று மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்ட சீக்கிய பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஆபாச தகவல்களை அனுப்பிய சீக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேற்கு டெல்லி ரமேஷ் நகரைச் சேர்ந்த அங்கத் சிங்(24) என்ற வாலிபருக்கு, அவர் சார்ந்த சீக்கிய மதத்தின் மீது அபார நம்பிக்கை உண்டு. எனவே, சீக்கிய மதம் அல்லாத வேற்று மதம் சார்ந்த நபர்களை திருமணம் செய்து கொண்ட சீக்கிய பெண்கள் மீது சிங்கிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. அதையடுத்து, பிற மதத்தை சேர்ந்தவர்களை கணவராக்கிக் கொண்ட பெண்களுக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் பல்வேறு முகவரிகளில் இருந்து ஆபாச தகவல்களை அனுப்பி இம்சைபடுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஈஸிகெட்டோ, அவேக்கனிங் யுவர் மைன்ட், ஒன்லி பார் ஸ்டிராங் வுமன் என பல்வேறு இணைய முகவரிகளில் இருந்து அருவெறுக்கத்தக்க அளவில் ஆபாச தகவல்கள் தொடர்ந்து வருவதாக சீக்கிய பெண்கள் பலரும் மேற்கு டெல்லி காவல்துறை துணை கமிஷனர் தீபக் புரோஹித்திடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்டாகிராம் இந்தியக் கிளையில் போலீஸ் கோரியதை அடுத்து, மேற்படி இணைய முகவரியை பயன்படுத்தும் நபர் குறித்த விவரம் போலீசுக்கு அளிக்கப்பட்டது. அதையடுத்து, அங்கத் சிங் பிடிபட்டார். எப்ஐஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமின் வழங்க உகந்த மனுவாக அங்கத் செய்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags : Sikh ,women , Sikh youth who posted pornographic information to women on Instagram
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி