×

தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட்டால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி: ஜான்பாண்டியன் உறுதி

தூத்துக்குடி: தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்டால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று ஜான்பாண்டியன் கூறியுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியன் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

இதுதொடர்பான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆணை வெளியிடப்படும் என்று அவர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். இந்த அரசாணை வெளியிடுவதைப் பொறுத்தே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம்.  தற்பொழுதுள்ள சூழ்நிலையில் கூட்டணிக்குள் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றார்.

Tags : Alliance ,AIADMK ,government ,Janpandian ,Devendrakula Vellalar , Devendrakula Vellalar, Government, AIADMK, Coalition
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...