×

துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்: சென்னையில் மீண்டும் பரபரப்பு

சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் பரிசோதித்து அனுப்பினர். அப்போது சென்னை, திருச்சி, ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் ஒரே குழுவாக சிறப்பு அனுமதி பெற்று துபாய் செல்ல இருந்தனர். அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை முழுமையாக சோதனையிட்டனர்.

உள்ளாடைகள் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால், யூரோ கரன்சிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.32.5 லட்சம். இதையடுத்து 3 பேரின் பயணத்தையும் ரத்துசெய்து அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று காலை துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் சென்னையை சேர்ந்த முகமது அஸ்மத் (25) என்ற பயணியின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம் மதிப்புடைய 220 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினர். அவரும் கைது செய்யப்பட்டார்.

Tags : Dubai , Rs 32 lakh foreign currency seized for trying to smuggle to Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...