×

சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் சிவகுமார்

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் கடந்தாண்டு சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இப்புகார் தொடர்பாக ஏற்கனவே இரண்டு சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்த சிவகுமாருக்கு மீண்டும் ஜனவரி 12ம் தேதி (நேற்று) ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையேற்று நேற்று காலை சிபிஐ அலுவலகம் வந்த சிவகுமாரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய பின் அனுப்பி வைத்தனர்.

Tags : Sivakumar ,CBI , Sivakumar appeared before the CBI
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...