×

பெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய காசியின் கும்பல் குறித்து குற்றபத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

நாகர்கோவில்: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் பழகி சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம் பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி (27) மற்றும் அவனது கூட்டாளிகள் மீதான வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே காசி மீதான, ஒரு கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது தவிர நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம், நேசமணிநகர் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும், சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் பாலியல் பலாத்காரம், ஆபாச படமெடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவை ஆகும். இந்த வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்தது. இதில் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கில் நேற்று மாலை, நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  

சுமார் 400 பக்க குற்றப்பத்திரிகையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் எவ்வாறெல்லாம் பழகி காசி மற்றும் அவரது சகாக்கள் இளம்பெண்ணை ஏமாற்றினர் என்பது தொடர்பான தகவல்கள் மற்றும ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஆபாச வீடியோக்கள் எடுத்து ஈவு இரக்கமின்றி கதற, கதற இளம்பெண்களை சீரழித்து காசி கும்பல் ரசித்துள்ளனர். மிக கொடூரமானவர்களாக நடந்து இருக்கிறார்கள் என குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி போலீசார் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின், மேலும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.


Tags : gang ,women ,Kasi ,doctor , kasi , abuse case, indictment
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...