×

சந்தைகளை குத்தகைக்கு விடுவதால் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்: ஐகோர்ட்

சென்னை: விவசாயிகள் விளைபொருட்களை விற்க வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் சந்தைகளை 3-வது நபருக்கு குத்தகைக்கு விடுவது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சந்தைகளை குத்தகைக்கு விடுவதால் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சேலம் மலர் அங்காடியை குத்தகைக்கு எடுத்தவர் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சேலம் மாநகராட்சி ஜனவரி 20-ல் பதிலளிக்க உத்தவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.


Tags : Farmers are being harassed in the name of leasing markets: iCourt
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...