×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 1,91,965 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில், கடந்த 24 மணி நேரத்தில்1,91,965 பயணிகள் பயணித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,050 பேருந்துகளில் 1,406 பேருந்துகளும், 199 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 4,140 பேருந்துகளில் 1,91,965 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,00,058 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : passengers ,festival ,Pongal ,hometown , In the last 24 hours, 1,91,965 passengers traveled by bus to their hometown ahead of the Pongal festival
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா