மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக முன்பதிவு செய்திருந்த மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல்நாளான இன்று 597 பேரிடமிருந்து, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க்கும் 774 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளையும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.