×

இளம்பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி வழக்கு!: பொங்கல் பண்டிகைக்கு பிறகு மேலும் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு..!!

நாகர்கோவில்: சென்னை பெண் மருத்துவர் உட்பட பல இளம்பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசி மீது மேலும் 2 குற்றப்பத்திரிக்கைகளை தயாரித்துள்ள சிபிசிஐடி போலீசார், பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னர்  தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி, இவர் சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களை காதலிப்பதாக நடித்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து அதனை படம் பிடித்து மிரட்டிய குற்றச்சாட்டில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், ஏற்கனவே கந்துவட்டி தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நேற்று விமான பணிப்பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்பட்ட மற்றுமொரு வழக்குகளில் 400 பக்கங்கள் கொண்ட 2வது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து காசி மீது மேலும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கைகளை சிபிசிஐடி போலீசார் தயார் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிக்கைகளை பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Tags : Kasi ,Nagercoil ,girls ,festival ,CBCID ,Pongal , Nagercoil Kasi, Pongal Festival, Crime Magazine, CPCIT
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...