ஈரோடு: மக்களுக்கு இலவசம் வழங்கும் விளையாட்டில் நாங்கள் ஈடுபடப்போவதில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை படித்து பார்த்து மக்கள் வாக்களிப்பதாக தெரியவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார். புதிய அரசியலுக்கான விதையை நாம் உடனடியாக போடவேண்டும் என ஈரோட்டில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பேசியுள்ளார்.